காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.கவில் ஐக்கியம்

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் 12ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ஹிமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தரம்பால் தாக்கூர், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சாயினி, முன்னாள் கவுன்சிலர் ராஜன் தாக்கூர், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் அமித் மேத்தா உள்ளிட்ட 26 காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. புதிகாக இணைந்தவர்களை வரவேற்றுள்ள அம்மாநில முதல்வர்ஜெய்ராம் தாக்கூர், தனது டுவிட்டரில், “காலம் மாறிக்கொண்டே இருக்கிறுது. இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் அக்கட்சியி்ல் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். பா.ஜ.க குடும்பத்தில் இணைந்துள்ள அவர்களை மனமார வரவேற்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பா.ஜ.கவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.