கேரளா புதிய திட்டம்

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன், ‘கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. பெண்களை பாதுகாக்க ‘பிங்க்’ பாதுகாப்புத் திட்டம் ஜூலை 19 முதல் செயல்படுத்தப்படும்’ என தெரிவித்தார். இந்த பிங்க் பாதுகாப்பு திட்டத்தில் பயிற்சி பெற்ற பெண் காவல் அதிகாரிகள் பணியாற்றுவர். இவர்கள், வரதட்சணை கொடுமை, பொது இடங்களில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது உள்ளிட்ட வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.