கேரள காங்கிரஸ் கோரிக்கை

கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான வி.டி.சதீசன், கேரள பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதாவில் கையெழுத்திடக்கூடாது. கேரள அரசின் கைப்பாவைகளை துணைவேந்தர்களாக நியமிப்பது தவறான நடைமுறை. இந்தச் சட்டங்கள் தவறானவை. லோக்ஆயுக்தா மசோதா மற்றும் இந்த பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடக் கூடாது என்று நாங்கள் கோருகிறோம். பல்கலைக் கழகங்களை அரசுத் துறைகளாக்குவதுதான் இடதுசாரி அரசின் நோக்கம். இது துணைவேந்தர் பதவியின், ஆசிரியர்களின் கண்ணியத்தை குலைக்கும். கேரள பல்கலைக் கழகங்களின் கல்வி நிலைமை போய்விட்டது. சுயாட்சியும் இழக்கப்படுகிறது. முறைகேடுகள் நடக்கின்றன. அனைத்துப் பல்கலைக் கழகங்களின் கல்வி வாரியங்களிலும் கல்வியாளர்கள் இல்லை, கட்சி உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உயர்கல்வி என்பது இங்கு வியாபாரம் ஆகிவிட்டது” என்று புகார் கூறினார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானும் இந்த மசோதாவுக்கு அதிருப்தி தெரிவித்தார். அரசாங்கங்கள் தங்கள் உறவினர்களை அதிபராக நியமிக்க உதவும் அத்தகைய மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.