வளர்ச்சிப் பாதையில் ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், திருப்பதி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயில் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஜிதேந்திரா சிங் மற்றும் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, ‘ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீராக உ:ள்ளது. இடதுசாரி பயங்கரவாதிகள், சர்வதேச பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் குறைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதல், பொருளாதார வளர்ச்சியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இம்மாநிலத்தையும் மற்ற மாநிலங்களை போல வளமுள்ள பொருளாதார பிரதேசமாக மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும்’ என்று கூறினார்.