ஜெகன்மோகன் அறிவிப்பு

‘கொரோனாவால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் வைப்புத் தொகையாக ரூ.10 லட்சம் வங்கியில் செலுத்தப்படும்’ என, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். ‘இந்த தொகையின் மூலம் டைக்கும் வட்டியை குழந்தையை பராமரிக்கும், வளர்க்கும் பாதுகாவலர் பயன்படுத்திகொண்டு குழந்தையை வளர்க்க வேண்டும். ஆதரவற்ற குழந்தையை அடையாளம் கண்டு அவர்களின் பெயரில் இந்த வைப்புத் தொகையை செலுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் அவர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.