பாடத்திட்டத்தை மாற்றுவது அவசியம்

யு.பி.எஸ்.சி தேர்வர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக் கூடாது. இல்லையென்றால் நீங்கள் தகுதியற்றவராக ஆகிவிடுவீர்கள். குடிமைப் பணியாளர்கள் சில நேரத்தில் தவறான முடிவை எடுக்க நேரலாம். நானும் சில தவறான முடிவுகளை எடுத்துள்ளேன். மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் நாம் எதிர்கொள்ள பழைய பாடத்திட்டத்தை மாற்றுவது அவசியம்” என்று கூறினார்.