ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல்

அல் கொய்தா முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு சமீபத்தில் பாரதத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதாக அச்சுறித்தல் விடுத்திருந்தது. இதுகுறித்து நாட்டின் பாதுகாப்புப் படைகளும் காவல் துறையும் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், மற்றொரு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் பாரதத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்து 10 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மற்றும் ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மீது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துவது போன்ற அனிமேஷன் படங்களும் இடம்பெற்றுள்ளன. மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என்ற செய்தியுடன் முடிவடையும் அந்த வீடியோவில் பாரதத்துடன் தூதரக உறவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் தலிபான்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ் விமர்சித்துள்ளது. இந்த அச்சுறுத்தல் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் உளவுத்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.