ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பலி

சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க, சிரியா ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில் வடமேற்கு சிரியாவின் அட்மேஹ் பகுதியில், அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. ‘இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹஷ்மி அல் குரேஷி கொல்லப்பட்டார். அமெரிக்க படைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக, அமெரிக்கா நடத்தி வரும் போருக்கு கிடைத்த வெற்றி இது’ என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.