ஐ.எஸ்.ஐ.எஸ் செயற்பாட்டாளர்கள் கைது

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ஷிஃபா ஹாரிஸ், மிஷா சித்திக் ஆகிய இரண்டு பெண்கள், டெலிகிராம், ஹூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக வலைத்தளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிரச்சார சேனல்களை இயக்கும் குழுவின் ஒரு பகுதியாக செயல்பட்டு வந்துள்ளனர். ஹாரிஸ் மற்றும் சித்திக் ஆகியோர் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் செயல்பாடுகளை ஆன்லைனில் ஊக்குவிப்பது, மக்களை மூளைசலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் ஈடுபடுத்துவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கண்டறிந்தது. இதனையடுத்து, புதுடில்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ விசாரணைக் குழு, நேற்று அதிகாலையில் அவர்கள் இருவரையும் அவர்களது வீட்டில் கைது செய்தது. இருவரும் டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.