சீனா சொல்வது உண்மையா?

கொரோனாவை உலகிற்கு அறிமுகப்படுத்திய சீனாவில் தற்போது கோவிட் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், நான்கு உள்நாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளைத் தவிர வேறு தடுப்பூசிகளுக்கு சீன அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், சீனாவில் இதுவரை 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 10 கோடி தடுப்பூசிகள் கடந்த 5 நாட்களில் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது.  2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், அந்த செய்தியின் முழுமையான நம்பகத்தன்மை குறித்து மற்ற நாடுகள் சந்தேகம் தெரிவித்துள்ளன.