இதுதானா இவர்களின் சட்டம்?

மிலாடி நபியை முன்னிட்டு, மதுரையில் கோரிப்பாளையம் தர்காவிற்கு செல்ல முயன்ற பா.ஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிமை பள்ளிவாசலிலும், தர்காவிலும் அனுமதிக்க மாட்டோம் என எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ, த.மு.மு.க., போன்ற முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் வெளிப்படையாக மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சட்டப்படி, மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யாமல், இப்ராஹிமை கைது செய்துள்ளது காவல்துறை. பா.ஜ.கவில் முஸ்லிம்கள் இணையும் நிலையில், மத நம்பிக்கையை சீர்குலைக்கும் தி.மு.க அரசு, முஸ்லிம்களை பா.ஜ.கவிற்கு எதிரான வன்முறைக்கு திட்டமிட்டு தூண்டிவருகிறது. பயங்கரவாத சக்திகளுக்கு தி.மு.க., அரசு பயப்படலாம், பா.ஜ.க ஒரு போதும் பயப்படாது என வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.