இதுதான் தி.மு.கவின் கொள்கையா?

தானத்தில் சிறந்தது அன்னதானம். அதனை செய்வது பெரும் புண்ணியம். கோயில்களில் கொடுக்கப்படும் அன்னதானத்திற்காக பக்தர்கள் தானமாக பல்வேறு உணவுப் பொருட்களை தானமாக அளித்து வருகின்றனர். ஆனால், மதுரை வீரமாகாளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவின்போது பக்தர்களால் வழங்கப்பட்ட அரிசி, சர்க்கரை, வெல்லம், மிளகாய்தூள் உள்ளிட்ட பொருட்களை, தி.மு.க அரசின் கைகளில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை ஏலம் விட செய்தித் தாள்களில் விளம்பரம் வெளியிட்டு உள்ளது. அந்த பொருட்களைக் கொண்டு வேறு நூற்றுக்கணக்கான கோயில்களில் அன்னதானம் செய்யலாமே. வயிற்றுப் பசியை போக்கும் உணவுப் பொருட்களுக்கு இந்த நிலை என்றால், உருக்கப்படும் தங்கத்திற்கு எந்த நிலையோ?