ஏற்பாடு செய்ததே இவர்தானோ?

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் போதைப்பொருள் உபயோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரின் ஜாமீன் மனு விசாரனையின்போது, நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அவரது வாட்ஸ் ஆப் அரட்டைகளில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகையிடம் போதைப்பொருள் பற்றி ஆர்யன் கான் விவாதித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த பொருட்களை சட்டவிரோத கொள்முதல் செய்தது, கடத்தல், விநியோகத்தில் ஆரியன் கானுக்கு கணிசமான பங்கு, ஆரியன் கான், அர்பாஸ் என்ற போதைப்பொருள் வணிகருடனான நெருக்கமான தொடர்பு, சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பில் உள்ள வெளிநாட்டு நபர்களுடன் ஆர்யன் கானின் நெருக்கமான தொடர்பு போன்ற ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.