பி.எப்.ஐ மிரட்டல்

மஹாராஷ்டிரா மாநிலம் சோலாபூரைச் சேர்ந்த, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் தேஷ்முக், காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) நிர்வாகி முகமது ஷாபி பிராஜ்தார் தனக்கு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார். அதில், பி.எப்.ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல முக்கிய தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோயில், மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களை தகர்க்கப் போவதாகவும் முகமது ஷாபி பிராஜ்தார் மிரட்டல் விடுத்துள்ளார். தலையை துண்டித்து என்னை கொல்லப் போவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகார் அளித்துள்ளார். இது குறித்து சோலாபூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.