உக்ரைன் போரில் இந்தியர்கள்

ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் சண்டையிட சுமார் 500க்கும் அதிகமான இந்தியர்கள் விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே இந்திய மாணவர் ஒருவர் உக்ரைன் துணை ராணுவத்தில் சேர்ந்துள்ள நிலையில், இரண்டு முன்னாள் கடற்படை வீரர்களும் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விண்ணித்தோரின் அனைத்து விண்ணப்பங்கள் உடனடியாக அங்கீகரிக்கப்படாது. மாறாக அந்தந்த நாட்டு சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என உக்ரைன் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமித்ரி குலேபா வெளியிட்டுள்ள தகவல்களின்படி இதுவரை 52 நாடுகளை சேர்ந்த சுமார் 30,000 பேர் சண்டையிட விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.