பாரத விண்வெளிக் கொள்கை 2023

விண்வெளித்துறையில் பாரதத்திற்கு புதிய வாசல்களைத் திறந்து, இந்தியாவின் விண்வெளித் துறையின் பகுதிகளை விரிவுபடுத்தும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள, பாரத விண்வெளிக் கொள்கை 2023க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், “இந்தக் கொள்கையானது ஒவ்வொரு விண்வெளி நிறுவனங்களின் பங்கு குறித்தும் தெளிவுபடுத்தும். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) பல்வேறு பணிகளுக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், பங்கேற்பையும் மேம்படுத்தும். ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்துறையினர். இதனை நம்பிக்கையுடன் உணர்வார்கள். விண்வெளிக்கான உலகளாவிய போட்டியில், பாரதத்திற்கு இது பெரும் உத்வேகத்தை அளிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

விண்வெளிச் சந்தையின் பங்களிப்பு: முதலாவதாக, இந்தக் கொள்கையானது உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் பாரதத்தின் விண்வெளிச் சந்தையின் பங்கை கணிசமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரம் தற்போது சுமார் 3,601 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ளது. உலகில் உள்ள ஒரு சில விண்வெளிப் பயண நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், விண்வெளிப் பொருளாதாரத்தில் பாரதம் தற்போது 2 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது. பாரதத்தின் விண்வெளித் துறையில், தனியார் துறையை ஊக்குவிப்பது, பாரத விண்வெளித் திட்டத்தை உலகளாவிய விண்வெளிச் சந்தையில் போட்டித்தன்மையுடன் இருக்க உதவும், இதனால் விண்வெளி மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் பல வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

தனியார் ஊக்குவிப்பு: இந்தக் கொள்கையானது இந்த ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பது, சுதந்திரமான விண்வெளி ஆய்வு மற்றும் பணிகளை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாக உள்ளது. இந்தக் கொள்கையானது, செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்குதல், தரவு சேகரிப்பு மற்றும் பரப்புதல் போன்றவற்றை உள்ளடக்கிய அனைத்து விண்வெளி நடவடிக்கைகளில் பங்கேற்க தனியார் துறையை அனுமதிக்கும். இந்தக் கொள்கையின் கீழ், விண்வெளித் துறை தொடர்பான மூலோபாய நடவடிக்கைகள் விண்வெளித் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும், இது தேவை உந்துதல் முறையில் செயல்படும். யூகிக்கக்கூடிய காலக்கெடுவுடன் கூடிய ஒற்றைச் சாளர பொறிமுறைகள் மூலம் வணிகத்தை எளிதாக்குவது, உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஒரு சமநிலை மற்றும் சாதகமான ஒழுங்குமுறை சூழலை வழங்குவது இதில் மேற்கொள்ளப்படும். பல ஆண்டுகளாக இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட தேசிய விண்வெளி உள்கட்டமைப்பை வணிக நட்பு பொறிமுறையின் மூலம் தனியார் தொழில்துறையின் பயன்பாட்டிற்கு கிடைக்கச் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இஸ்ரோ உருவாக்கிய சோதனை, கண்காணிப்பு மற்றும் டெலிமெட்ரி, ஏவுதளங்கள் மற்றும் ஆய்வகங்கள் தொடர்பான வசதிகள் இதில் அடங்கும்.

இஸ்ரோ தலைவர் கருத்து: இதுகுறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத்,  “விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதே விண்வெளிக் கொள்கையின் மையமாக இருக்கும். சமீபத்தில் உருவாக்கப்பட்ட இன்ஸ்பேஸ், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இடையேயான இடைமுகமாக இருக்கும். இஸ்ரோ வசதிகளை, தனியார் துறையினர் சிறிய கட்டணத்தில் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பையும் இந்தக் கொள்கை விளக்குகிறது. மேலும் இந்தத் துறைக்கான புதிய உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முதலீடு செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது” என்று தெரிவித்தார்.