போரை நிறுத்த பாரதம் முயற்சிக்கும்

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பாரதம் உட்பட சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். அவ்வகையில், ஜி7 உச்சிமாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெனல்ஸ்கியும் கலந்துகொண்டார். அவர் ஜி7 நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். பின்னர் பிரதமர் மோடியை சந்தித்தார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 452வது நாளை எட்டியுள்ள நிலையில் பாரதப் பிரதமர் மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த சந்திப்பின்போது ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி “போரை முடிவுக்கு கொண்டுவர பாரதம் சார்பில் எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்த மோதலை அரசியல், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இது மனிதாபிமானம், மனித மதிப்பு தொட்ர்பான பிரச்சினையாக பார்க்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பேசியுள்ளோம். நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் நேருக்கு நேர் சந்தித்துள்ளோம். இந்த போர் ஒட்டுமொத்த உலகத்திற்கும் பெரிய பிரச்சனை. இது உலகத்தில் பல்வேறு பாதிப்புகளை போர் ஏற்படுத்தியுள்ளது” என கூறினார்.