2047ல் பாரதம் வளர்ந்த நாடாகும்

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ‘டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்னான்ஸ்டு டெக்னாலஜிஸ் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், “உலகம் அதிவேக மாற்றத்தை கண்டு வருகிறது. பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது. இந்த துறையில் பல தொழில்நுட்ப மாற்றங்களை நாம் கண்டு வருகிறோம். பாதுகாப்பு துறையில் பல புதிய பிரச்சனைகளும் எழுகின்றன. குறிப்பாக சைபர் ஸ்பேஸ் மிரட்டல்கள் அதிகரிக்கின்றன. மாற்றத்துக்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும். தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் முன்வைக்கப்பட வேண்டும். நமது நாட்டின் பாதுகாப்புத் தளவாடங்கள உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்த துறையில் ரூ. 900 கோடியாக ஏற்றுமதி இருந்தது. அது தற்போது ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி, 2027ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் பாரதம் 3வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும். 2047ம் ஆண்டுக்குள் பாரதம் வளர்ந்த நாடாக மாறும். நமது நாடு சுயசார்பு பெற்று வருகிறது. வருங்காலத்தில் உலக பொருளாதாரத்தில் பாரதம் முதல் இடத்தை பிடிப்பதையும் மறுக்க முடியாது என்று கூறினார்.