பாரத அமெரிக்க பேச்சுவார்த்தை

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோனி பிளிங்கன் ஆகியோருடன் ஏப்ரல் 11ல் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 2 + 2 பேச்சுவார்த்தையில், பாரத அமெரிக்க உறவுகள், குவாட் கூட்டமைப்பு, உக்ரைன் ரஷ்ய விவகாரம் உள்ளிட்ட முக்கியமான பிராந்திய, உலகளாவிய விவகாரங்கள், புவிசார் அரசியல் நிலை உள்ளிட்டவை விவாதிக்கப்படும் என தெரிகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான 2+2 அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடைசியாக 2020 அக்டோபரில் டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.