பாரதத்தின் வலிமை அதிகரிப்பு

உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்கஞ்ச் பகுதியில் பா.ஜ.க பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேர்று பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் கங்கா என்னும் திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான பேரை பாரதத்திற்கு திரும்பக் கொண்டுவந்துள்ளோம். இந்த பணியை விரைவுப்படுத்துவதற்காக, 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். பாரதத்தின் வலிமை அதிகரித்து வருவதால்தான் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டினரை பாதுகாப்பாக மீட்க முடிகிறது. நமது ஆத்மநிர்பர் அபியான் திட்டம், பாரதத்தின் கொரோனா தடுப்பூசி, மற்றும் நமது பாதுகாப்பு படைகளை அவமதிப்பவர்களால் பாரதத்தை ஒருபோதும் வலுப்படுத்த முடியாது’ என்று கூறினார்.