இம்ரான்கான் புலம்பல்

ஜம்மு-காஷ்மீர் பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீரில் முஸ்லிம் ஜிஹாதிகளுக்கு அளிக்கும் ஆதரவை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று நமது மத்திய அரசு திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், சட்டப்பிரிவு 370 நீக்கத்தை ரத்து செய்தால் மட்டுமே பாரதத்துடன் பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன், தங்கள் நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது என கவலை தெரிவித்தவரும் இவர்தான்.அதேபோல, அமெரிக்கா எங்களை ஆதரிக்க வேண்டும் என கெஞ்சியவர் இவரது நிதியமைச்சர் குரேஷி என்பது குறிப்பிடத்தக்கது.