சட்டவிரோத வங்கதேசத்தவர் கைது

பெங்களூருவில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட வங்கதேசப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில், வங்க தேசத்தை சேர்ந்த ஷோபூஜ் ஷேக், ரபீக், ரிடோய் பாபு, ராகிபுல் இஸ்லாம் சாகர், முகமது பாபு ஷேக், ஹகில், அஜிம், ஜமால், தலிம், நஸ்ரத், காஜல், தான்யா ஆகிய வங்க தேசத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த பெண்ணை வேலை வாங்கித் தருவதாக அழைத்துவந்து பாலியல் சித்ரவதை செய்து அதனை வீடியோ எடுத்து பரப்பியுள்ளனர். இந்த கைது குறித்து பெங்களூரு காவல் ஆணையர் கமல் பந்த் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் மீதான விசாரணையை 5 வார காலத்திற்குள் முடித்துவிட்டதாகவும், 1019 பக்க குற்றச்சாட்டு ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் கூறினார். மேலும், இந்த விரைவாக செயல்பட்ட விசாரணைக் குழுவைப் பாராட்டி அந்த அணிக்கு ரூ. 1 லட்சம் வெகுமதி வழங்கப்படுவதாக அறிவித்தார்.