துணிச்சல் இருந்தால் தடுக்கட்டும்

மேற்கு வங்கத்தில் வங்க தேசத்தை பூர்வீமாக கொண்ட மாதுவாஸ் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில பா.ஜ.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, “சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பலமுறை நாம் விவாதித்துள்ளோம். இந்த சட்டம் மேற்கு வங்காளத்தில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். துணிச்சல் இருந்தால் மமதா பானர்ஜி இதனை தடுத்து பார்க்கட்டும்” என கூறினார். உரிய ஆவணங்களுடன் வசிக்கும் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று சி.ஏ.ஏ சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதத்துக்கு வரும் புலம் பெயர்ந்த, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயின் சமூகத்தினர், பார்சி மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ சட்டம் அனுமதிக்கிறது. எனினும், இந்த சட்டத்தின் கீழ் இதுவரை யாருக்கும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.