விளம்பரத்தில் ஐ-பேக் கைவரிசை

இவ்வருடம் தமிழகத் தேர்தலில் தி.மு.க-வுக்காக அச்சிடப்படும் பேனர்கள், போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்கள் போன்றவை மொத்தமாக பஞ்சாபில் அச்சிடப்பட்டு தமிழகத்தில் பட்டுவாடா செய்யப்படுகிறது. இவை அனைத்தும் பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும், உடன்பிறப்புகளை பெரும்பாலும் இப்பணிகளை செய்து, அதில் பணம் பார்ப்பார்கள். ஆனால் இவ்வருடம் அந்த வாய்ப்பையும் ஐ-பேக் பிடுங்கிவிட்டது. ஏற்கனவே தி.மு.கவின் வேட்பாளர் தேர்வு, என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என அனைத்து விஷயங்களிலும் ஐ-பேக் மூக்கை நுழைப்பதால் கடும் கோபத்தில் உள்ள உடன் பிறப்புகளை இது மேலும் விரக்தியடைய வைத்துள்ளது.