ஹிந்து சமூகம் பொறுப்பேற்காது

“கர்நாடகா மாநிலத்தில் பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்டது உட்பட சமீபத்தில் முஸ்லிம் ஜிஹாதிகள் நிகழ்த்திய வன்முறை மற்றும் பயங்கரவாத கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் ஹிந்து சமுதாயத்திற்கும் விரைவான நீதியை உறுதி செய்ய, வழக்குகள் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும். விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பரிசீலிக்க வேண்டும். இதுபோன்ற ஜிஹாதி மனப்பான்மை, துரோகங்கள், கொடூரங்கள், படுகொலைகள் தொடர்ந்து  நடைபெற்றால், ஹிந்து சமூகத்தில் வெளிப்படையான கோபம் ஏற்படும். அதற்கு இயற்கையாகவே ஒரு தீவிர எதிர்வினை இருக்கும். அப்படி நடந்தால் அதற்கு ஹிந்து சமுதாயம் பொறுப்பேற்காது.

எங்கள் இளைஞர் அணியான பஜ்ரங் தளம் மாநில அளவில் ஹெல்ப்லைன் எண்களை வழங்கியுள்ளது. யாருக்கேனும் இதுபோன்ற வன்முறை அச்சுறுத்தல்கள் வரப்பெற்றால் உடனடியாக அவர்கள் இதுகுறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். உள்ளூர் காவல்துறையுடன், சட்ட மற்றும் தொடர்புடைய அனைத்து தேவையான உதவிகளுக்கும் அந்த ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ளலாம். வி.ஹெச்.பி எப்போதும் ஹிந்து சமுதாயத்திற்கு ஆதரவாக நிற்கிறது.  முஸ்லிம் சமூகம் மதானி மற்றும் ஓவைசிகளின் தலைமையை ஏற்க வேண்டுமா அல்லது கலாம் மற்றும் அஷ்பக் உல்லா போன்றவர்களின் தலைமையை ஏற்கவேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

முஸ்லீம் சமூகம் தனது சமூக அமைப்பில் இருந்து பயங்கரவாத மனநிலையை உதறித் தள்ள வேண்டும். அதனை வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் அவர்களின் வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகளில் சுய முரண்பாடுகள் இருக்கும். ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகள் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றன. ஒருபுறம், அவர்கள், தலை துண்டித்தல் மற்றும் வெடிகுண்டுகளை வீசும் ஜிஹாதி கும்பல்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள், மறுபுறம், அவர்கள் கன்வாரி பாதயாத்திரை செல்பவர்களுக்கு குளிர்பானம் வழங்குவது போல நடிக்கிறார்கள்.

ஜிகாதி வன்முறையை ஊக்குவிக்கும், தூண்டும் பொருட்கள் இணையம் மூலம் பரப்பப்பட்டு பரப்பப்படுகின்றன. இவைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும். நேபாளத்தில் இருந்து டெல்லி வரை பயங்கரவாத வழித்தடத்தை அமைக்கும் சதித் திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அதை முற்றிலும் தடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என்று வி.ஹெச்.பி பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே கூறியுள்ளார்.