செஞ்சட்டை பேரணியில் ஹிந்து அவமதிப்பு

மதுரை பைபாஸ் ரோட்டில் மே 29ல் செஞ்சட்டை பேரணி நடந்தது. இப்பேரணியில் மதுரை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. வெங்கடேசன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்றவர்கள் ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், ஹிந்து சமுதாயத்தையும், ஹிந்து கடவுள்களையும் இழிவான வார்த்தைகளால் வசைபாடி பாடல்களை பாடியும், கோஷமிட்டும் பேரணியாகச் சென்றனர். குறிப்பாக, கடவுள் கண்ணனையும், சுவாமி ஐயப்பனையும் இழிவுபடுத்தினர். கடவுள் முருகனுக்கு நேர்ச்சை செய்யும் சடங்குகளையும் கொச்சைப்படுத்தினர். பொதுவழியில் இப்படி பேசி அமைதியான சமுதாயத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் கம்யூனிஸ்ட், வி.சி.க., திராவிடர் கழகம் மீதும், இழிவாக கோஷமிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளனர். இப்புகார் தொடர்பாக திராவிடர் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.