ஹிந்து தேசம் வரைவு அறிக்கை

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள சங்கராச்சாரியா பரிஷத் என்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்த துறவிகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைந்து, சட்ட நிபுணர்களின் உதவியுடன், வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளனர். அதன்படி, பாரதத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், டெல்லிக்கு பதில், வாரணாசியை தலைநகராக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாரணாசியில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் மகாமேளா விழாவின்போது, ஹிந்து மத அமைப்புகள் நடத்தும், ‘தர்ம சன்சத்’ கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இந்த வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவும் விவாதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களிடமும் இந்த வரைவு அறிக்கை குறித்து விளக்கி கருத்துக்களை கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.