ஹிஜாப் வழக்கு தீர்ப்பு

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அனைத்துக்கட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் கடந்த 22ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த வாரம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான ஹிமந்த் குப்தா வரும் 16ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால், ஹிஜாப் தடை வழக்கில் இந்த வார இறுதிக்குள் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.