சிவன்மலை பெட்டியில் மூலிகைகள்

திருப்பூர், சிவன்மலை ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில் ‘ஆண்டவர் உத்தரவு பெட்டி’ உள்ளது. இதில், பக்தர் கனவில் இறைவன் தோன்றி கூறும் பொருட்களை வைத்து வழிபடப்படுகிறது. இப்பொருட்கள் சமுதாயத்தில்  நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. சென்னிமலையை சேர்ந்த நாகேஸ்வரி என்பவர் கனவில் கூறியபடி, நேற்று வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், மஞ்சள் பொடி, விபூதி ஆகியன பூஜை செய்து வைக்கப்பட்டன. இது போன்ற மூலிகை  பொருட்கள்தான் கொரோனாவுக்கு எதிரான கிருமிநாசினியாக, ஆவி பிடிக்க, கஷாயம் காய்ச்ச பரிந்துரைக்கப்படுகிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.