மிசோரமில் பிடிபட்ட ஆயுதக் குவியல்

மிசோரம் மாநிலத்தில் ஆயுதப் பதுக்கல் குறித்த ரகசியத் தகவல் ராணுவத்தினருக்கு கிடைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து தீவிர சோதனை நடத்தினர். அப்போது சுமார் 1,300 கிலோ வெடி பொருள், 2,000 ஃபியூஸ்கள், 925 மின்னனு டெட்டனேட்டர்கள் மற்றும் 3,000 சிறப்பு டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கபட்டன. இவைகளை பறிமுதல் செய்த ராணுவ வீரர்கள், இந்த பதுக்கலுடன் தொடர்புடைய இருவரை கைது செய்தனர். அவர்கள் மீது தற்போது காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.