ஹெச்.சி.எல் ஷிவ் நாடார் ராஜினாமா

ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இயக்குநர் குழுவின் ஆலோசகராக ஷிவ் நாடார் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பதவி விலகலைத் தொடர்ந்து தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் இப்பதவியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் விலகினார். அந்த பொறுப்பில் கடந்த ஓர் ஆண்டாக இவரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.