விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அவரது டுவிட்டர் பதிவில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நல்வாழ்த்துகள். இறைவன் விநாயகரின் ஆசிகள் எப்போதும் நமக்கு கிட்டட்டும்.” என தெரிவித்துள்ளார். இதேபோல, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என வாழ்த்தியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, நான் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். இதேபோல, பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.