என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு சம்பந்தமாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி சைலேந்திர பாபு, “இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதல்வர் பரிந்துரைத்தார். அதன்படி, மத்திய உள்துறைச் செயலகம் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்கும். இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக, காவல் துறையினரிடம் இருந்த ஆவணங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் காவல் துறை வழங்கும்” என்றார்.