பிரசாதக் கடையில் ஹலால் பொருட்கள்

ஹிந்து மதத்தை சிதைத்து, மாற்றுமத சித்தாந்தங்களை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என மறைமுக திட்டத்தோடு செயல்பட்டு வரும் தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது ஹிந்து அறநிலைய துறை. இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பவானி ௯டுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் பிரசாதம் விற்கும் கடையில் ‘ஹலால்’ முத்திரை பதிக்கப்பட்ட திண்பன்டங்கள் விற்கப்பட்டன. இந்த அப்பட்ட விதிமீறல் குறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பாளர்களும் ஊா் பொதுமக்களும், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டனர். இதனால், அக்கடையின் ஏல ஒப்பந்தம் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.