குரூப் கேப்டன் காலமானார்

தமிழகத்தின் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அதில் உயிருடன் மீட்கப்பட்டவர் வருண் சிங் மட்டுமே. 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துவிட்டனர். இச்செய்தி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.