ஆளுனர் மாளிகை சிக்கன நடவடிக்கை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர்‌ அலுவலகத்‌தில்‌ பணியாற்றி வந்த மேற்பார்வையாளர், செய்தித் தொடர்பாளர், குறைகேட்கும்‌ அதிகாரிகள் அப்பணியில்‌ இருந்து மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஆளுநர்‌ மாளிகை மேற்பார்வையாளராக சந்தர போஸ்‌, செய்தித் தொடர்பு அதிகாரியாக குணசேகரன்‌ புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்‌. மேலும், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளும்‌ எடுக்கப்பட்டு நிர்வாகம்‌ சீரமைக்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்கள்‌ இனி 3,000 ரூபாய்க்கு மேல்‌ செலவு செய்ய ஆளுநரின்‌ தனிச்செயலாளரிடம்‌ ஒப்புதல்‌ பெற வேண்டும்‌. வாடகைக்கு பொருள்கள், ஒப்பந்த அடிப்படையில்‌ பொருள்கள்‌ எடுப்பதாக இருந்தால் அதன்‌ செலவு கணக்குகளை‌ முன்னதாகவே சமர்ப்பித்து ஒப்புதல்‌ பெற வேண்டும்‌. புதிதாக வாங்கும் பொருட்களுக்கு‌ குறைந்த செலவில்‌ ஒப்பீடு அடிப்படையில்‌ முன்‌அனுமதியுடன் வாங்க வேண்டும்‌ என‌ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களிடமிருந்து பெறப்படும்‌ கோரிக்கைகளை பரிசீலனை செய்ய தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.