விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு

தமிழக அரசின் விதைச் சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு (ஆர்கானிக் சான்று) துறை, கோவையில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தை சென்னைக்கு மாற்றுவதாக, தமிழக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் சட்டசபையில் அறிவித்தார். ஆனால், மாநிலத்தில் அங்ககச்சான்று பெற்றுள்ள விவசாயிகள், விவசாயக் குழுக்களில், 50 சதவீதம் பேர், கோவை சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்தவர்கள். விதை உற்பத்தி நிறுவனங்களும் இப்பகுதியில் அதிகம். அரசின் இந்த முடிவால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், வேளாண் உற்பத்தி, ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும். நிர்வாக நலன் என்று கூறி, சென்னைக்கு கொண்டு செல்வது சரியல்ல. இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.