மதரஸாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

மத்தியப் பிரதேச மாநிலம் கிழக்கு நிவார் மாவட்டத்தில் உள்ள கந்த்வா நகரத்தில் ஜகாரியா மஸ்ஜித்தில் இமானுவேல் என்ற மதரஸா செயல்பட்டு வருகிறது. இந்த மதரஸாவில் 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் படிக்க வருகின்றனர். இங்கு மௌல்வி எனப்படும் மதகுருவாக இருப்பவர் 60 வயதான அப்துல் சமது. இவர்,அங்கு படிக்கவந்த 5 வயதுடைய குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். ஒருநாள் அந்த சிறுமி, தனது மார்புப் பகுதி வலிப்பதாக பெற்றோரிடம் கூறினாள். பெற்றோர் அச்சிறுமியிடம் நடந்த விவரத்தை கேட்கையில் மதரசாவில் அவளுக்கு நடந்த பயங்கரத்தை சிறுமி கூறினாள். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், மௌல்வி மீது மொகட் காவல் நிலையித்தில் புகார் அளித்தனர். அதையடுத்து அப்துல் சமதை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.