எல்லைக்கு செல்லும் விநாயகர்

உலகெங்கிலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி. தேச சுதந்திரத்திற்காக மக்களை ஒற்றுமைப்படுத்த மிக சிறந்த வழியாக பாலகங்காதர திலகர் தேர்ந்தெடுத்த வெற்றிகரமான வழிகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. தேச பாதுகாப்பிற்கும் விநாயகர் வழிபாட்டிற்கும் பெரிய ஒற்றுமை அன்றிலிருந்தே துவங்கிவிட்டது. இந்நிலையில், நமது பாரத எல்லைப் பகுதிகளை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில், அவர்களும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட, மும்பையில் இருந்து விநாயகர் சிலைகள் சிலவற்றை வீரர்களுக்கு அனுப்பி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.