மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளுப் பேத்தி

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியும் சமூக ஆர்வலரான எலா காந்தியின் மகளுமான ஆஷிஷ் லதா ராம்கோபின், தொழிலதிபர் எஸ்.ஆர்.மஹாராஜை 6.6 மில்லியன் ரேண்ட் மோசடி செய்தது, போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பு உள்ளிட்ட வழக்கில் தென் ஆப்பிரிகாவின் டர்பன் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் வெளியே விடவும் டர்பன் சிறப்பு வணிக குற்ற நீதிமன்றம் மறுத்துவிட்டது. மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் மகளான எலா காந்தியின் மகள் லதா ராம்கோபின் என்பது குறிப்பிடத்தக்கது.