பராகுவேயில் காந்தி சிலை திறப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  ஆகஸ்ட் 22 முதல் 27 வரை தென் அமெரிக்காவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதில் அவர், பிரேசில், பராகுவே, அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தின்போது, பராகுவே தலைநகர் அசன்சியன் நகரின் முக்கிய நீர்முனையில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை அவர் திறந்து வைத்ததார். சிலையை அமைத்துள்ள அசன்சியன் நகராட்சியின் முடிவைப் பாராட்டிய ஜெய்சங்கர், இந்த செயல் கொரோனா பெருந்தொற்றுநோய் காலத்தின் போது மிக வலுவாக வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமையின் அறிக்கையாகும் என்றார். மேலும் பராகுவேயில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பாரத தூதரக வளாகத்தையும் அவர் திறந்து வைத்தார். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு பராகுவேயின் சுதந்திர போராட்ட இயக்கம் தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க காசா டி லா இன்டிபென்டென்சியா பகுதியையும் அவர் பார்வையிட்டார்.