வருங்கால வைப்பு நிதி புதிய அறிவிப்பு

கொரோனா பரவலால், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. அதனையடுத்து கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளும் வசதியை வருங்கால வைப்பு நிதி அளித்தது. மேலும் தங்கள் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து, அதிகபட்சம் 75 சதவீதம்வரை எடுத்துக்கொள்ள கடந்த மாதம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் வேலையை இழந்து கணக்கில் வரவு செலுத்தப்படாதவர்களும், அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கை முடிக்காமல் உள்ளதால் பென்ஷனுக்கான அனைத்துத் தகுதிகளும் வழக்கம்போல தொடரும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.