இலவச மருத்துவ ஊர்தி

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவாபாரதி அமைப்பின் இலவச நடமாடும் மருத்துவ ஊர்தி சேவை சென்னையில் மீண்டும் துவங்கப்பட்டது. இந்த துவக்க நிகழ்ச்சியில் சோழமண்டலம் நிறுவனத்தை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன், பிரசன் குமார், அயனாவரம் 24 மணி நேர மருத்துவமனையை சேர்ந்த டாக்டர். அன்பரசு மற்றும் வடதமிழக சேவாபாரதி மாநில பொருளாளர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.