முன்னாள் எம்.எல்.ஏ கைது

இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த முன்னாள் டெல்லி சட்டமன்ற உறுப்பினர் விவேகானந்த் சங்கர் பாட்டீல் என்பவர் கர்னாலா நகரி சகரி வங்கியின் முன்னாள் தலைவர், இன்டர்-அலியா, கர்னாலா ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்தவர். இவர், இதனைப் பயன்படுத்தி கடந்த 2008 முதல் போலி கணக்குகள், செலவினங்கள், கடன்கள் என சுமார் 234 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முறைகேடு செய்துள்ளார். இது குறித்த விசாரணையில், இரண்டு மாதங்களுக்கு முன் அவரை கைது செய்த அமலாக்கத்துறை, அவரது சொத்துகளை தற்போது முடக்கியுள்ளது.