பிரியாணி கடைகளை மூடிய முன்னாள் அமைச்சர்

மேற்கு வங்கத்தில் கூச் பெஹர் மாவட்டத்தைச் சேர்ந்த திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரபிந்திர நாத் கோஷ், அங்குள்ள சில பிரியாணி கடைகளை மூடும்படி கூறியுள்ளார். இது குறித்து விளக்கமளித்த அவர், “பீஹார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் இங்கு சட்டவிரோதமாக பிரியாணி கடைகளை திறந்துள்ளனர். அந்தக் கடைகளில் பிரியாணி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சில மசாலாப் பொருள்கள் ஆண்மை சக்தியை குறைப்பதாக பலர் புகாரளித்துள்ளனர். இதையடுத்தும் அனுமதி ஏதும் பெறாமல் நடத்திய இந்தக் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.