பயங்கரவாதிக்கு அனுதாபப்பட்ட முன்னாள் முதல்வர்

காஷ்மீரில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு அப்பாவித் தொழிலாளர்கள் சமீபத்தில் ஹைபிரிட் பயங்கரவாதிகளால் வெடிகுண்டுகள் வீசி படுகொலை செய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி இம்ரான் பஷீர் கனியை காவல்துறை கைது செய்தது. அவன் அளித்த தகவலின் பேரில் மற்றொரு பயங்கரவாதியை பிடிக்க ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் பாதுகாப்புப் படைகளும் தீவிர நடவடிக்கை எடுத்தன. இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது அவனை அங்கு ஒளிந்திருந்த மற்றொரு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி, இம்ரான் பஷீர் கனியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். இதுகுறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கவலை தெரிவித்துள்ளார். “இது தர்க்கத்தை மீறும் செயல். இதனை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். நாம் இங்கு பயங்கரவாதிகளை பிடிப்பது பிறகு கொல்வது என்ற கொள்கையை கொண்டிருக்க முடியாது. ஒரு காலத்தில் இது பஞ்சாபில் பரவலாக இருந்தது” என கூறியுள்ளார். ஒரு பயங்கரவாதிக்கு பரிந்து பேசும் முன்னாள் முதல்வரின் இந்த செயலை ஜம்மு காஷ்மீர் மக்கள் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.