கோவை கார் குண்டுவெடிப்புக்கு வெளிநாட்டு நிதி?

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை, இவ்வளவு பெரிய அளவிலான வெடிபொருட்களை வாங்குவதற்கு செலவழிக்கப்பட்ட பணத்தின் அளவு, இந்த மிகப்பெரிய சதித்திட்டத்தின் பின்புலம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வெளிநாட்டு தொடர்புகள், நிதி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஃபெரோஸ் இஸ்மாயிலுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், தற்போதைய வழக்கிற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விரிவாக ஆராயப்படும். குற்றம்சாட்டப்பட்டுள்ள முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சர் கான் ஆகியோரை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார்கள். இறந்த ஜமேஷா முபினின் தடைசெய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பி.எப்.ஐ) கேரள மாநிலச் செயலாளரான சி.ஏ.ரவூப் முபினுடன் இருக்கக்கூடிய தொடர்பு, நிதி பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது தல்கா, தடைசெய்யப்பட்ட அல் உம்மா அமைப்பின் நிறுவனர் சையத் அகமது பாஷாவின் சகோதரரான நவாப் கானின் மகன் ஆவார். 58 உயிர்களைக் கொன்ற 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்த குழு இருந்தது. 2019ல் இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பின் மூளையாக இருந்த இலங்கை இஸ்லாமிய மதகுரு சஹ்ரான் ஹாஷிமுடன் முகநூலில் முபீன் தொடர்பில் இருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், ஜமேஷா முபீன், தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தொடர்பு வழக்கில் கேரள சிறையில் உள்ள முகமது அசாருதீனின் நெருங்கிய நண்பர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது குற்றவாளியான அப்சர் கான், முபீனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.