அதானி விவகாரம் விசாரிக்க ஐவர் குழு

அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை குறித்து விசாரிக்க, எஸ்.பி.ஐ முன்னாள் தலைவர் ஓ.பி. பட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி. தேவதர், பிரபல வங்கியாளர் கே.வி. கமல்நாத், இன்போசிஸ் துணை நிறுவனர் நாதன் நிலேகனி, வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசன் ஆகியே 5 பேர் அடங்கிய நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. மேலும், இந்த குழுவின் செயல்பாடுகள், அறிக்கைகள் ஆகியவை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரேவால் கண்காணிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டிஓய் சந்திர சூட், நீதிபதிகள் பி.எ.ஸ். நரசிம்ஹா, ஜே.பி. பரதிவாலா அமர்வு பிறப்பித்த உத்தரவில், “முதலீட்டாளர்களை பாதுகாப்பது, அவர்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவது, அதானி குழுமத்தால் ஏதாவது சட்டமீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது ஆகிய நோக்கங்களுக்காக இக்குழு அமைக்கப்படுகிறது. இக்குழு தனது அறிக்கையை முத்திரையிட்ட உறையில் இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யும். நிபுணர் குழுவுக்கு செபி, என்.எஸ்.இ, பி.எஸ்.இ உள்ளிட்ட அமைப்புகள் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக் குறித்து தான் கெளதம் அதானி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அதானி குழுமம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்பதாகவும், இது ஒரு முடிவைக் கொண்டு வரும், உண்மையே வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.