களப்பணியாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள்

கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக வேறு நபர்களை பணியமர்த்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதாக வந்த செய்தியை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். மேலும், ‘இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் முதலமைச்சரை கேட்டுக்கொண்டார். இதனையறிந்த முதல்வர் ஸ்டாலின், ‘தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்’ என்ற உத்திரவாதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் வழியாக ஓ.பி.எஸ்சுக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஸ்டாலினுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார் ஓ.பி,எஸ்.