காங்கிரசின் தோல்வி பயம்

ஹிமாசல பிரதேசம், சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், “ராகுல் காந்தியை எங்கே, காணவில்லை? அவர் பாதயாத்திரையில் இருக்கிறார், ஹிமாச்சல மாநிலம் குறித்தும் ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் குறித்தும் காங்கிரசின் திறமையான தலைமை ஏன் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது? தேர்தல் பிரச்சாரம் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ளது. ஆனால், இதுவரை ராகுலையும் அவரது தாயார் சோனியாவையும் இங்கு காணவில்லை. தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் ராகுல் இருக்கிறார். அதனால் இங்கு வராமல் தவிர்க்கிறார்” என்றார்.